தேர்தலை நடாத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிக்கு இறங்கிய தேசப்பிரிய!

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தனது இல்லத்திற்கு முன்பாக அவர் தனிமனித போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளும் அவரது இல்லத்திற்கு முன்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

வேட்புமனுத் தாக்கல் செய்து தேர்தலை தாமதப்படுத்துவது எதேச்சாதிகாரத்துக்குச் சமமானது. அரசாங்கத்தின் செல்வாக்கு காரணமாகவே உள்ளூராட்சித் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது என தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தவிர்த்து அதிகாரிகள் ஆட்சி புரிவது மக்களின் உரிமைகளை மீறும் செயல் என பதாதையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

 

 

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...