பணயக் கைதிகள் பாதுகாப்பாக திரும்பும் வரை அமைதியாக இருக்க முடியாது: பைடன்

Date:

காஸா மக்கள் ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்படும் நிலையில் பைடன் தனது x பக்கத்தில், குறிப்பொன்றை பதிவிட்டுள்ளார்.

“ஹமாஸினால் கடத்தப்பட்டு பணயம் வைக்கப்பட்டுள்ளவர்கள் பாதுகாப்பாக திரும்பும் வரை என்னால் அமைதியாக இருக்கவே முடியாது அனைத்து கடத்தப்பட்ட நபர்களும் தங்கள் அன்புக்குரியவர்களிடம் திரும்பும் வரை நான் ஓய்வெடுக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

ரபா மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கிடையே ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள இஸ்ரேல் பணயக் கைதிகளை மீட்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில், பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாசுக்கு இதுவே கடைசி வாய்ப்பு என்று இஸ்ரேல் தெரிவித்து போர் நிறுத்த முன்மொழிவை அளித்துள்ளது.

ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட போர் நிறுத்தத்தின் போது 100-க்கும் மேற்பட்ட பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(அல் ஜஸீரா)

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில...

வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு நீர் வெட்டு !

அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் இன்று...

ஹிரோஷிமா தினம்: மனித வரலாற்றின் ஆறாத வடுவும் அணுஆயுதங்களற்ற உலகத்திற்கான குரலும்

இரண்டாம் உலகப் போரின் உச்சக்கட்டம். 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி,...

பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை விடுமுறை: கல்வி அமைச்சு!

2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ்...