மத்திய கிழக்கு நாடுகளை மிரட்டும் கனமழை: துபாய், ஓமனை தொடர்ந்து சவூதியிலும் தொடரும் மழை! !

Date:

மத்திய கிழக்கு நாடுகளில் சமீப நாட்களில் கனமழை கொட்டி வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் கன மழை பெய்த நிலையில், நேற்று சவுதி அரேபியாவில் பலத்த சூறாவளியுடன் கன மழை பெய்தது.

புனித நகரான மதினாவில் சாலைகளில் மழை நீர் ஆறுபோல் ஓடியது. சில இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு கார்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

ஒரு மசூதியின் மேற்கூரையிலிருந்து மழை நீர் அருவி போல் கொட்டியது. ரியாத் உள்ளிட்ட நகரங்களிலும் கன மழை பெய்த நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் மழை தொடரும் என வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

“மே 1 ஆம் திகதி பஹ்ரைனிலும், மே 2 ஆம் திகதி அபுதாபி, துபாய், ஷார்ஜாவிலும் மழை பெய்யும்” என தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (04) நாட்டின் சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை...