‘மஹிந்த வெற்றிபெறாவிட்டால் தன்னைத்தானே சுட்டுக் கொள்வேன்’: பிரபல ஜோதிடர் சந்திரசிறி பண்டார காலமானார்!

Date:

இலங்கையின் பிரபல ஜோதிடர் சந்திரசிறி பண்டார (63) காலமானார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று (22) காலை காலமானார்.

கடந்த காலங்களில் அரசியல் கள நிலவரங்களை எதிர்வுகூறுவதில் ஜோதிடர் சந்திரசிறி பண்டார சர்ச்சைகளுக்குள்ளாக்கப்பட்டிருந்தார்.

2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ‘இருதின’ என்ற சிங்கள பத்திரிகையில் சந்திரசிறி பண்டார தொடர்ந்தும் எழுதி வந்துள்ளார். அதேவேளையில் தனியார் தொலைக்காட்சிலும் அவரது நிகழ்ச்சி ஒன்று தொடர்ந்து இடம்பெற்று வந்தது.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்த சில கருத்துக்கள் மற்றும் எதிர்வுகூறல்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத்துறையாலும் கைது செய்யப்பட்டிருந்தார்.

மேலும் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெற்றியடைவதாகக் கணித்து அது நடக்கவில்லை என்றால் தன்னைத் தானே சுட்டுக் கொள்வதாக அறிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெறாவிட்டால், பொதுவெளியில் சுட்டுக் கொள்வேன்  எனவும் ஜாதகம் பார்ப்பதை நிறுத்துவதாகவும் பகிரங்கமாக அறிவித்தார்.

எனினும், ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதால், அவரது கணிப்பு குறித்தும், தன்னைத் தானே தலையில் சுட்டுக்கொள்ளும் சவால் குறித்தும் பலரும் விசாரிக்கத் தொடங்கினர்.

அதன்பின்பு பார்வையாளர்கள் மத்தியில் அபிப்பிராயத்தை ஏற்படுத்தவே இவ்வாறான கருத்தை வெளியிட்டதாகவும்  இந்த கணிப்புகள் 100% துல்லியமானவை அல்ல எனவும் தெரிவித்திருந்தார் இதுதொடர்பில் மக்கள் மத்தியில் விமர்சனத்துக்கும் கேலிக்குள்ளாக்கப்பட்டிருந்தார்.

 

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...