முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்புக் கோர நடவடிக்கை: அமைச்சர் ஜீவன்

Date:

கொரோனா பரவலின்போது கட்டாய தகனம் செய்தமைக்காக முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பு கேட்டு அமைச்சரவை பத்திரம் கொண்டு வரப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் சம்பிரதாய மன்னிப்பு கோரும் அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கம் உலக சுகாதார ஸ்தாபனம் உட்பட பல விஞ்ஞான கருத்துக்களை நிராகரித்து இந்த நிர்ப்பந்தத்தை உருவாக்கியுள்ளது.

மேலும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வல்லுநர்கள் தலைமையிலான ஆய்வு மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் நீர் தொழில்நுட்ப ஒருங்கிணைந்த ஆராய்ச்சி மற்றும் செயல்விளக்க மையத்தின் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் முந்தைய அரசாங்கத்தின் நிலைப்பாடு இப்போது சவாலுக்கு உட்படுத்தப்பட்டு மறுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...