முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்புக் கோர நடவடிக்கை: அமைச்சர் ஜீவன்

Date:

கொரோனா பரவலின்போது கட்டாய தகனம் செய்தமைக்காக முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பு கேட்டு அமைச்சரவை பத்திரம் கொண்டு வரப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் சம்பிரதாய மன்னிப்பு கோரும் அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கம் உலக சுகாதார ஸ்தாபனம் உட்பட பல விஞ்ஞான கருத்துக்களை நிராகரித்து இந்த நிர்ப்பந்தத்தை உருவாக்கியுள்ளது.

மேலும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வல்லுநர்கள் தலைமையிலான ஆய்வு மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் நீர் தொழில்நுட்ப ஒருங்கிணைந்த ஆராய்ச்சி மற்றும் செயல்விளக்க மையத்தின் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் முந்தைய அரசாங்கத்தின் நிலைப்பாடு இப்போது சவாலுக்கு உட்படுத்தப்பட்டு மறுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...