முஸ்லிம் பாடசாலைகளில் நிலவும் பிரச்சினைகளை ஆராய்ந்து விரைவான தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

Date:

கொழும்பு  மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளின் பிரச்சினைகள் குறித்து தேடியறிந்து அவற்றுக்கு விரைவில் தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
கொழும்பு பிரதேசத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் எதிர்கொள்ளும் கல்விசார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக இன்று (02) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு பணிப்புரை விடுத்தார்.
ஆசிரியர் பற்றாக்குறை, போதிய இடவசதி மற்றும் வகுப்பறைகள் இல்லாமை, சிங்கள மொழியில் இஸ்லாத்தை கற்பிப்பதில் உள்ள சிரமங்கள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் பாடசாலைகள் இல்லாமை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த அமர்வின் போது அமைச்சர் அலி சப்ரி மற்றும் பாடசாலை அதிபர்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் கொழும்பில் உள்ள முஸ்லிம் பாடசாலைகள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு விளக்கமளித்தனர்.
குறிப்பிட்ட விடயங்களை ஆராய்ந்து அறிக்கையளிக்குமாறு கல்வி அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, இந்தப் பிரச்சினைகளில் சிலவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பித்தார்.
ஏறக்குறைய 40,000 மாணவர்கள் சிங்கள மொழி மூலம் கல்வி பெறுவதுடன், சிங்கள மொழியில் இஸ்லாத்தை கற்பிப்பதில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் பற்றாக்குறை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
முஸ்லிம் மாணவர்களின் பற்றாக்குறையால் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எடுத்துரைத்த அமைச்சர் அலி சப்ரி, கொழும்பில் சுமார் 19 முஸ்லிம் பாடசாலைகளும் களுத்துறையில் 70 பாடசாலைகளும் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், கொழும்பின் சில பிரதேசங்களில் முஸ்லிம் பாடசாலைகள் இல்லாததால் மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. சில பாடசாலைகளை பொருத்தமான காணிகளுக்கு இடமாற்றுவதற்கான தெரிவுகளை ஆராயுமாறு ஜனாதிபதி விக்ரமசிங்க நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

Popular

More like this
Related

முஸ்லிம்களின் உலகத்துக்கு மணிமகுடமாக இருப்பது பலஸ்தீனம்.அதை விட்டுவிடாதீர்கள்”: அல் ஜஸீரா செய்தியாளரின் உருக்கமான இறுதிப் பதிவு!

காசாவில் இப்போது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. காசாவை முழுமையாகக் கட்டுப்படுத்த...

கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் (EASCCA )மாநாட்டு மண்டபம் ஏறாவூரில் திறந்து வைப்பு!

ஏறாவூரில் அமையப் பெற்றுள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் EASCCA மாநாட்டு...

சமூகத்துக்கு கொடுக்க வேண்டிய மிக உன்னதமான செய்திகள் இக்கண்காட்சி மூலம் கொடுக்கப்பட்டுள்ளது; மௌலவியா ஜலீலா ஷஃபீக்!

மாவனல்லையில் இயங்கி வருகின்ற மகளிருக்கான உயர் கல்வி நிறுவனமான ஆயிஷா உயர்...

சர்வதேச அல்-குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை சார்பில் வெலிகம மத்ரஸதுல் பாரி மாணவன் பங்கேற்பு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சவுதி அரேபியா தூதரகமும் இணைந்து கடந்த...