ரத்துபஸ்வல துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான தீர்ப்பு இன்று!

Date:

ரத்துபஸ்வல சம்பவம் தொடர்பில் மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று (30) அறிவிக்கப்படவுள்ளது.

சுத்தமான குடிநீர் கோரி ரதுபஸ்வல பிரதேசவாசிகளால் 2013 ஆம் ஆண்டு வெலிவேரி நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் இடையே மேற்கொள்ளப்பட்டது.

இதில் மூன்று இளைஞர்கள் கொல்லப்பட்டதுடன், 45 பேர் கடுயாமடைந்திருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு இராணுவ அதிகாரிகள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், நீண்ட விசாரணைக்கு பிறகு இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

இந்தச் சம்பவம் இடம்பெற்ற போது ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச பதவி வகித்ததுடன், பாதுகாப்பு செயலாளராக கோட்டாபய ராஜபக்ச பதவி விகத்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...