வெலிகம கல்பொக்க வீதியிலுள்ள மத்ரஸா ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
மாத்தறை மாநகரசபை தீயணைப்பு பிரிவு, வெலிகம பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த மத்ரஸாவில் மாணவர்கள் உள்ளே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் வெலிகம பொலிஸார் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.