ஷவ்வால் தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று!

Date:

ஹிஜ்ரி 1445 ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையை (நோன்புப் பெருநாளை) தீர்மானிக்கும் மாநாடு இன்று 09ஆம் திகதி கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.

 

கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு தலைவர் கலீபதுல் குலபா மௌலவி எம்.பி.எம் ஹிஷாம் பத்தாஹி தலைமையில் இன்று மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்றவுள்ள இந்த மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.ரிஸ்வி முப்தி, முஸ்லிம் சமய கலாச்சார திணைக்கள பணிப்பாளர் பைஸல் ஆப்தீன் மற்றும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் தலைவர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

 

இதுதவிர, கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிறைக்குழு உறுப்பினர்கள், மேமன் சங்க பிரதிநிதிகள், ஸ்ரீலங்கா ஷரிஆ கவுன்சில் பிரதிநிதிகள், பள்ளிவாசல் கதீப்மார்கள், பேஷ் இமாம்கள், நிர்வாகிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

பிறை தென்பட்டால் பூரண ஆதாரத்துடன் 0112432110, 0112451245, 0777353789 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...