ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவரானார் நிமல் சிறிபால!

Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மன்றக்கல்லூரியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அவசர குழுகூட்டம் இன்று முற்பகல் இடம்பெற்றது.

கூட்டத்தில் கட்சியின் முன்னாள் தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் பங்கேற்றிருந்தார்.

கட்சியின் தலைவராக இருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியின் தலைமை பதவியை வகிப்பதற்கு கொழும்பு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு விதித்திருந்தது.

இதனையடுத்தே, கட்சியின் அரசியல்குழு கூட்டம் அவசரமாக கூடப்பட்டு நிமல் சிறிபால டி சில்வா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மீள கட்டியெழுப்பும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கூறி வருகின்றார்.

மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகளிலும் அவர் அதிருப்தி தெரிவித்திருந்தார்.

அதேவேளை, நீதிமன்றத்தில் தமது தரப்பு நியாயங்களை முன்வைத்து மீண்டும் கட்சி தலைவர் பொறுப்பை ஏற்பேன் என மைத்திரிபால சிறிசேன சவால் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

வெற்றி சோகமாக மாறிய தருணம்: கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகேயின் தந்தை காலமானார்

இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர் துனித் வெல்லலகேயின் தந்தை சுரங்க...

இலங்கையின் மூன்றாவது நெனோ செயற்கைக்கோள் விண்வெளிக்கு!

உள்ளூர் பொறியாளர்களின் தொழில்நுட்ப பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட மூன்றாவது நெனோ செயற்கைக்கோளை இன்று...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (19) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல் மாகாணங்களிலும்...

செப்டம்பர் 17-19 திகதிகளில் இந்தோனேசியாவில் நடைபெறும் மதங்களுக்கிடையிலான கருத்தரங்கு!

அஷ்ஷைக்.எஸ்.எச்.எம். பளீல் இந்தோனேசியாவில் இருந்து... "மத சுதந்திரமும் ஆசியாவில் மத சிறுபான்மையினது உரிமைகளும்"...