7 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபான அனுமதிப் பத்திரம்: சிங்கள ஊடகம் வெளியிட்ட தகவல்

Date:

எதிர்க்கட்சியைச் சேர்ந்த மேலும் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் இருந்து மதுபானக் கடை அனுமதிப்பத்திரத்தை பெற்றுள்ளதாக ‘லங்காதீப’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மதுபானசாலை அனுமதிப்பத்திரம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த இருவர், கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த இருவர், தென் மாகாணத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு உதவுவதாக உறுதியளித்ததன் பேரில் இந்த மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான தகவல்கள் அந்தந்த மாவட்ட விகாராதிபதிகள் மூலம் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அரசாங்கம் இருநூறு புதிய மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளதாக அண்மையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் தெரியபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

‘உலக மக்கள் காசா பக்கம் நிற்கும் வரை இஸ்ரேல்-அமெரிக்காவின் சதி நிறைவேறாது”: இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற பேரணி!

சென்னையில் காசாவில் நிலவும் போரினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, பெரியாரிய உணர்வாளர்கள்...

2025(2026)சாதாரண பரீட்சைக்கான ONLINE விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2025(2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைககு தோற்றுவதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள்...

இலங்கையில் அதிகரித்துள்ள இணையவழி துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும்...

சவூதி- பாகிஸ்தான் ஒப்பந்தம்: இந்தியா உடனான உறவுகளை மனதில் வைத்து சவூதி செயல்படும் என நம்புவதாக இந்தியா தெரிவிப்பு.

சவூதி மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கையெழுத்தான...