7 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபான அனுமதிப் பத்திரம்: சிங்கள ஊடகம் வெளியிட்ட தகவல்

Date:

எதிர்க்கட்சியைச் சேர்ந்த மேலும் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் இருந்து மதுபானக் கடை அனுமதிப்பத்திரத்தை பெற்றுள்ளதாக ‘லங்காதீப’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மதுபானசாலை அனுமதிப்பத்திரம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த இருவர், கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த இருவர், தென் மாகாணத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு உதவுவதாக உறுதியளித்ததன் பேரில் இந்த மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான தகவல்கள் அந்தந்த மாவட்ட விகாராதிபதிகள் மூலம் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அரசாங்கம் இருநூறு புதிய மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளதாக அண்மையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் தெரியபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...