அமெரிக்கவின் எலைட் சர்வதேச வான் பல்கலைக்கழகத்தில் இணைகிறார் இலங்கை விமானப்படை தளபதி

Date:

இலங்கை விமானப்படை தளபதி அமெரிக்கவின் எலைட் சர்வதேச வான் பல்கலைக்கழகத்தின் மதிப்புக்குரிய பழைய மாணவராக இணைகின்றார்.

அலபாமா மேக்ஸ்வெல் விமானப்படை தளத்தில் அமைந்துள்ள வான் பல்கலைக்கழகத்தின் சர்வதேச மரியாதை பட்டியல் (International Honour Roll) அறிமுக விழா கடந்த 2024 ஏப்ரல் 19ஆம் திகதி இடம்பெற்றது.

இதன்போது அந்தப் பல்கலைக்கழகத்தில் பயின்ற 21 முன்னாள் சர்வதேச மாணவர்கள் கௌரவப்படுத்தப்பட்டனர்.

இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களும் இந்த கௌரவ பட்டியலில் இதன்போது இணைந்து கொள்கின்றார்.

சர்வதேச வான் பல்கலைக்கழகத்தினால் சர்வதேச மரியாதை பட்டியல் (International Honour Roll) கௌரவமளிப்பு அந்த பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியை கற்ற இராணுவ மற்றும் முதன்மை சிவில் பிரிவில் கடமையாற்றும் வெளிநாட்டு அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட கட்டளை இல்லாத அதிகாரிகளுக்கு வழங்கி கௌரவிக்கப்படும்.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...