இனி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை!

Date:

வெளிநாட்டினரிடம் மோசடி மற்றும் அவர்களிடம் அநாகரிகமான நடத்தையில் ஈடுபடும் தனிநபர்கள் மற்றும் குழுவினரை எச்சரிப்பதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார் .

“இந்த நபர்கள் வெளிநாட்டினருக்கு மரியாதை காட்டுவதில்லை. அவர்களின் நடவடிக்கைகள் நமது நாட்டின் நற்பெயருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன,

இதனை பொறுத்துக்கொள்ள முடியாது, நவீன கால சுற்றுலாப் பயணிகள் பலவிடயங்களை நன்கு அறிந்தவர்கள் மற்றும் அவர்களை எளிதில் தவறாக வழிநடத்த முடியாது என தெரிவித்துள்ள அவர் நட்புறவு மற்றும் விருந்தோம்பலுக்கு இலங்கையின் நற்பெயரைப் பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

“ஏப்ரல் மாதத்திற்குள் ஏறக்குறைய 700,000 வெளிநாட்டவர்கள் வருகை தந்துள்ளனர் . தற்போது சுற்றுலாத்துறை வளர்ச்சி கணிப்பிட்டு வருகிறது ஆனால் இதுபோன்ற செயல்கள் நமது நற்பெயருக்கு களங்கம் மற்றும் நமது பொருளாதாரத்திற்கு சேதம் விளைவிப்பதைத் தடுப்பது மிகவும் முக்கியமானது” என்று கமகே எச்சரித்தார்.

அண்மையில், களுத்துறை மற்றும் கொழும்பு அளுத்கட பகுதியில் சுற்றுலாப் பயணிகளை தரக்குறைவாக நடத்தும் இரண்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...