ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையை நாடும் பேராயர்!

Date:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையை முன்னெடுக்குமாறு கோரி கத்தோலிக்க திருச்சபை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையை நாடவுள்ளது.

பி.பி.சி சிங்கள செய்தி சேவைக்கு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் நேற்று (21) இந்த விடயத்தினை அறிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 05 வருடங்கள் கடந்துள்ள போதிலும் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சதி மற்றும் அதற்கு மூளையாக செயற்பட்டவர்கைளை தற்போதைய அரசாங்கமும் முன்னர் இருந்த அரசாங்கமும் வெளிப்படுத்தத் தவறிவிட்டதாக குற்றம் சாட்டினார்.

“பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுத் தருவதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எமக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற தவறியுள்ளார்.

அதேபோன்று, இந்த தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எழுத்து மூல கடிதம் அனுப்பியுள்ளோம். அதற்கும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.

வெளிகொணரப்பட்டுள்ள புதிய விடயங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பலமுறை கோரினாலும் அரசாங்கம் அதனை கவனத்தில் எடுக்காமை தெளிவாக புலப்படுகின்றது.

Popular

More like this
Related

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...