கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ள உதவி தேர்தல்கள் ஆணையாளர்கள்: ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு

Date:

ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளதால்  அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பிரதி மற்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர்கள் கொழும்புக்கு இன்று புதன்கிழமை அழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று முதல் எதிர்வரும் மூன்று நாள் செயலமர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்போது, தேர்தல் செலவுகள் ஒழுங்குபடுத்தல் சட்டத்தை செயற்படுத்துவதுவதற்கு போதிய தெளிவுப்படுத்தல்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்காக தேர்தல் செலவுகள் ஒழுங்குபடுத்தல் தொடர்பில் சர்வதேச அனுபவம் கொண்ட விசேட நிபுணர்களின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக ரத்நாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜூலை மாத இறுதியில் அல்லது ஒகஸ்ட் மாத முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அறிவிக்கப்படுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் அறிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது செப்டம்பர் மாதம் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதிக்கும் இடையேயான காலப்பகுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...