சஜித்துடன் இணைந்த மொட்டு உறுப்பினர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை?

Date:

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 06 பேர் அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்தமை தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.

இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்தோர் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சுதந்திர மக்கள் சபை இணைந்து புதிய கூட்டணியை அமைத்தனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் ஐக்கிய மக்கள் கூட்டணி நிறுவப்பட்டது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 05 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட நிலையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான

ஜி.எல். பீரிஸ், ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் கைச்சாத்திட்டனர். மேலும், சுதந்திர மக்கள் சபையின் உறுப்பினர்களான ஜி.எல்.பீரிஸ், டிலான் பெரேரா, நாலக கொடஹேவா, கே.பி. குமாரசிறி, உபுல் கலப்பட்டி மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோர் ஐக்கிய மக்கள் கூட்டணியின் இணைந்துக்கொண்டனர்.

Popular

More like this
Related

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் இணைய சேவைக்கு தடை

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு...