தேர்தலை இலக்குவைத்து மொட்டுக்கட்சியின் புதிய வேலைத்திட்டங்கள்: பிரமாண்ட மே தினத்துக்கு ஏற்பாடு

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை கீழ்மட்டத்திலிருந்து பலப்படுத்தும் புதிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கட்சியை வலுப்படுத்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக வீடுகளுக்குச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

”எதிர்வரும் எந்தவொரு தேர்தலுக்கும் முகங்கொடுக்கும் வகையில் கட்சி பலப்படுத்தப்படும். பொதுஜன பெரமுனவை நாட்டின் பலம் வாய்ந்த கட்சியாக தொடர்ந்தும் பேணுவதற்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறோம்.” என்றும் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்களை எடுக்கப்பட்டுள்ளன.

அவற்றில் 04 முக்கிய தீர்மானங்களை அவர் தனது ‘X’ தளத்தில் இன்று புதன்கிழமை பதிவிட்டுள்ளார்.

அவை வருமாறு,

1.அனைத்து மாவட்டங்களிலும் பெண்கள் உட்பட மாவட்ட/தேர்தல் தொகுதி அமைப்பாளர்களை நியமித்தல்.

2.வெற்றிகரமான மே தினப் பேரணியை நடத்தல்

3.மே தினத்திற்குப் பின்னர் மாவட்ட மற்றும் வெளிப்புற கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தல்

4.அரசியலமைப்பு விதிமீறல்களை கண்காணிக்கும் ஒழுங்குமுறைக் குழுவைச் செயல்படுத்தல்

இதேவேளை, கடந்த 2022ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அரசியல் புரட்சியால் பொதுஜன பெரமுன கடுமையான பின்னடைவை சந்தித்திருந்தது.

தற்போது இவர்கள் மீண்டும் கிராம மட்டத்தில் பொதுக் கூட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளனர். தமது மக்கள் பலத்தை நிரூபிக்கும் வகையில் பிரமாண்டமான மே தினக் கூட்டத்தை இம்முறை நடத்தவும் இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...