புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு புதிய இடைக்கால நிர்வாக சபை, வக்பு சபையால் நியமனம்

Date:

நீண்ட காலமாக வெற்றிடமாக உள்ள புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கான நம்பிக்கையாளர் சபையை தெரிவு செய்யும் வகையில் இடைக்கால நிர்வாக சபையொன்றை வக்பு சபை நியமித்துள்ளது.

இதற்கான நியமன கடிதங்களை புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் வழங்கி வைத்தார்.

இக்குழுவின் அங்கத்தவர்களாக பின்வருவோர் இடம்பெறுகின்றார்கள்.

தொழிலதிபர் எம்.டீ ருஹுல் ஹக், சட்டத்தரணி எம்.ஏ.எம். அஸீம், அஷ்ஷெய்க் . எச்.எம். மின்ஹாஜ், (இஸ்லாஹி), ஆசிரிய ஆலோசகர் ஏ.டீ.எம். நிஜாம், அஷ்ஷெய்க் எம்.எம்.முஹ்சீன், கிராமசேவகர்களான என்.எம். ரிஸ்மி, எம்.எப்.எம் முஜாஹித், வர்த்தக சங்கத்தலைவர் வை.எம்.நிஸ்தார், ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இக்குழுவினர் இரண்டரை மாத கால இடைவெளியில் பள்ளிவாசலுக்கான புதிய நம்பிக்கையாளர் சபையை தெரிவு செய்வது அவசியம் என முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் அலா அஹமத் ‘நியூஸ் நவ்’ க்குத் தெரிவித்தார்.

புத்தளம் பெரிய பள்ளிவாசல் புத்தளம் பிரதேசத்தில் சமூக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...