மத்திய கிழக்கு நாடுகளை மிரட்டும் கனமழை: துபாய், ஓமனை தொடர்ந்து சவூதியிலும் தொடரும் மழை! !

Date:

மத்திய கிழக்கு நாடுகளில் சமீப நாட்களில் கனமழை கொட்டி வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் கன மழை பெய்த நிலையில், நேற்று சவுதி அரேபியாவில் பலத்த சூறாவளியுடன் கன மழை பெய்தது.

புனித நகரான மதினாவில் சாலைகளில் மழை நீர் ஆறுபோல் ஓடியது. சில இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு கார்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

ஒரு மசூதியின் மேற்கூரையிலிருந்து மழை நீர் அருவி போல் கொட்டியது. ரியாத் உள்ளிட்ட நகரங்களிலும் கன மழை பெய்த நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் மழை தொடரும் என வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

“மே 1 ஆம் திகதி பஹ்ரைனிலும், மே 2 ஆம் திகதி அபுதாபி, துபாய், ஷார்ஜாவிலும் மழை பெய்யும்” என தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...