இந்தியாவில் கைதானவர்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த கொத்தலாவல பல்கலைக்கழக விரிவுரையாளருக்கு பிணை!

Date:

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரான புன்சர அமரசிங்க என்பவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இம்மாதம் 20 ஆம் திகதி இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் அஹமதாபாத் விமானிநிலையத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் எனக்கூறி சந்தேகத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

இந்த நால்வர் தொடர்பில் போலியான தகவல்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் புன்சர அமரசிங்க  கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் அண்மையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே இவ்வாறு போலியான தகவல்களை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 10 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டார்.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...