இந்தியாவில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்: புதுடில்லிக்கு அழைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர்கள்!

Date:

இந்தியாவில் இடம்பெற்று வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான இந்திய கூட்டணிக்கு (I.N.D.I.A) வெற்றி வாய்ப்புக்கள் உள்ளதாக வெளியான தகவல்களை அடுத்து, இந்தியா கூட்டணியின் தலைவர்கள் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி புதுடில்லிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி 280 முதல் 290 இடங்களைக் கைப்பற்றும் என்றும் இதில் காங்கிரஸ் கட்சி தனித்தே 120 முதல் 130 தொகுதிகளில் வெல்லும் என்றும் பிந்திய கருத்துக்கணிப்பு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

இதுவே ஜூன் முதலாம் திகதியன்று நடைபெறவுள்ள ஆலோசனைக்கூட்டத்துக்கான காரணம் என்று இந்திய முன்னணி ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாரதீய ஜனதா கட்சியை பொறுத்தவரையில் 370 முதல் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று அந்தக்கட்சி பிரசாரம் செய்து வருகிறது.

எனினும் வடமாநிலங்களில் தற்போது இந்தியா கூட்டணிக்கு வாய்ப்பாக தேர்தல் களம் மாறியிருப்பதால் பாரதீய ஜனதா கட்சி 260 முதல் 280 தொகுதிகளிலேயே வெற்றி பெறும் என்று பிந்திய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.

இதனடிப்படையில் புதிய ஆட்சி அமைப்பதற்கான முன் நகர்வுகளை மேற்கொள்ள ஜூன் முதலாம் திகதி இந்தியா கூட்டணியின் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...