இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்களே அதிகளவில் கொல்லப்பட்டுள்ளனர்!

Date:

இலங்கையில் வடக்கு கிழக்கிலே அதிகளவான ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆதவன் செய்தி பிரிவுக்கு வழங்கிய விஷேட காணொளி பதிவிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இலங்கையில், வடக்கு கிழக்கு ஊடகவியலாளர்களுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

“வடக்கு – கிழக்கிலே அதிகளவான ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டார்கள். அதிகளவில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களும் தமிழ் ஊடகவியலாளர்களே.

சிவராம், நிமலராஜன் போன்றவர்களின் உயிர்களு பறிக்கப்பட்டது.

தற்போது, தமிழ் ஊடகவியலாளர்களே அடிப்பட்டு கொண்டிருக்கின்றார்கள்.

கருத்துச் சுதந்திரத்தை நிறுத்துவதற்கு அனைத்து அரசாங்கங்களும் ஊடகத்துறையையும், ஊடவியலாளர்களையுமே தாக்குகின்றனர்.

அதன்படி, ஊடக சுதந்திரதினமான இன்று, வெறுமனே ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தை பற்றி மட்டும் பேசுவதை தவிர்த்து, நடைமுறையில் உண்மையான சுதந்திரத்தை வழங்க வேண்டும்.

அவர்களுக்கு கிடைக்கும் இந்த சுதந்திரம் மக்களுடைய சுதந்திரமுமாகும்.” என அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...