கொழும்பு விமான கண்காட்சி அடுத்த வருடத்திற்கு ஒத்திவைப்பு!

Date:

கொழும்பு விமான கண்காட்சி மற்றும் பாதுகாப்பு கண்காட்சி (CADE 2024) மே 29 முதல் ஜூன் 2 வரை காலி முகத்திடல் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தில் நடைபெறவிருந்த நிலையில், அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை (SLAF) தெரிவித்துள்ளது.

இலங்கை விமானப்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட CADE, சர்வதேச பங்காளிகள் மற்றும் பாதுகாப்பு துறை பங்குதாரர்கள் மற்றும் வெளிநாட்டு விமானப்படைகளின் பல கோரிக்கைகளின் காரணமாக, அவர்களின் பங்கேற்பிற்கான அதிக வாய்ப்புகளுக்கு இடமளிப்பதற்கும் பார்வையாளர்களுக்கு மாறுபட்ட அனுபவத்தை வழங்குவதற்கும் மீண்டும் திட்டமிடப்பட்டது.

இலங்கை விமானப்படையின் 74வது ஆண்டு நிறைவை ஒட்டி இந்த நிகழ்வு 2025 பெப்ரவரி 26 முதல் மார்ச் 02 வரை நடைபெறும் என விமானப்படை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...