சஜித்தின் மே தின மேடையை புறக்கணித்த ராஜித, தலதா

Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களாக கருதப்படும் ராஜித சேனாரட்ன, தலதா அத்துகோரள ஆகியோர் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

ஐக்கள் மக்கள் சக்தி பிரதான பங்காளிக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனும் கலந்துகொள்ளவில்லை.

கட்சிக்குள் உள்ள ஏற்பட்டுள்ள சில கருத்து முரண்பாடுகள் காரணமாகவே ராஜித சேனாரட்ன, தலதா அத்துகோரள ஆகியோர் மே தின நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை எனத் தெரியவருகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைத்துக்கொள்வதற்கு எதிராக தலதா அத்துகோரள அண்மையில் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார். அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் இணைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த பின்புலத்திலேயே இன்றைய கூட்டத்தில் அவர் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...