சஜித்தின் மே தின மேடையை புறக்கணித்த ராஜித, தலதா

Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களாக கருதப்படும் ராஜித சேனாரட்ன, தலதா அத்துகோரள ஆகியோர் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

ஐக்கள் மக்கள் சக்தி பிரதான பங்காளிக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனும் கலந்துகொள்ளவில்லை.

கட்சிக்குள் உள்ள ஏற்பட்டுள்ள சில கருத்து முரண்பாடுகள் காரணமாகவே ராஜித சேனாரட்ன, தலதா அத்துகோரள ஆகியோர் மே தின நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை எனத் தெரியவருகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைத்துக்கொள்வதற்கு எதிராக தலதா அத்துகோரள அண்மையில் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார். அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் இணைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த பின்புலத்திலேயே இன்றைய கூட்டத்தில் அவர் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...