சிலந்தி,தேள் மாதிரிகளை கடத்த முயன்ற அமெரிக்க அருங்காட்சியகக் கண்காணிப்பாளர் இஸ்தான்புல் விமான நிலையத்தில் கைது !

Date:

துருக்கி இஸ்தான்புல்லில் நூற்றுக்கணக்கான விஷ சிலந்திகள் மற்றும் தேள்களை நாட்டிலிருந்து கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்படும் நபரை துருக்கி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நியூயார்க்கின் அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் கண்காணிப்பாளரான குறித்த சந்தேக நபர் இஸ்தான்புல் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

இவர் கடத்த இருந்த 1,500 விஷத் தேள்கள் மற்றும் சிலந்திகள் மற்றும் பெயர் குறிப்பிடப்படாத மருந்து திரவங்களைக் கொண்ட டசன் கணக்கான பிளாஸ்டிக் போத்தல்களைக் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த திரவமானது தேள் விஷத்தில் இருந்து பெறப்பட்ட மிகவும் மதிப்புமிக்க மருந்து என்று அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளதுடன் இது லிட்டருக்கு 10 மில்லியன் டொலர் மதிப்புடையதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

துருக்கி நாட்டின் சட்டங்களுக்கு அமைய இத்தகைய உள்ளூர் இனங்களை ஏற்றுமதி செய்வது தடை  செய்யப்பட்டுள்ளன.

தேசிய வனவிலங்கு கடத்தல் விதிமுறைகளை மீறியதாகவும் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களை அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக கொண்டு செல்ல முயன்ற குற்றச்சாட்டின் பேரில்  இவர் துருக்கி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

‘உலக மக்கள் காசா பக்கம் நிற்கும் வரை இஸ்ரேல்-அமெரிக்காவின் சதி நிறைவேறாது”: இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற பேரணி!

சென்னையில் காசாவில் நிலவும் போரினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, பெரியாரிய உணர்வாளர்கள்...

2025(2026)சாதாரண பரீட்சைக்கான ONLINE விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2025(2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைககு தோற்றுவதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள்...

இலங்கையில் அதிகரித்துள்ள இணையவழி துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும்...

சவூதி- பாகிஸ்தான் ஒப்பந்தம்: இந்தியா உடனான உறவுகளை மனதில் வைத்து சவூதி செயல்படும் என நம்புவதாக இந்தியா தெரிவிப்பு.

சவூதி மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கையெழுத்தான...