நீர்மின் உற்பத்தி அதிகரித்துள்து’: மின் கட்டணத்தை குறைக்குமாறு சஜித் கோரிக்கை

Date:

மழை காரணமாக மின் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் மின் கட்டணத்தை குறைக்குமாறு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (22) உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக நீர்மின் நிலையங்களுக்கு அருகிலுள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

இவ்வாறான நிலையில், மின்சார அலகொன்றின் விலையை குறைப்பதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு 2 தடவைகள், மின்சார சபையிடம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோரியுள்ளது.

என்றாலும் அந்த முன்மொழிவுகள் இதுவரையில் சமர்ப்பிக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

15-20 சதவீதமாக இருந்த நீர்மின் உற்பத்தி மட்டம் இந்த மாதம் 20 ஆம் திகதி 31 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவும் இலங்கை மின்சார சபையும் ஒன்றிணைந்து இந்த நன்மையை மின்சார பாவனையாளர்களுக்கு வழங்க வேண்டும் “ என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.

நாட்டில் நீர்மின் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் அதன்நன்மைகளை பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...