பாடசாலைகளில் காணப்படும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய பெரிய மரங்களை வெட்ட உத்தரவு: புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி. ஹேரத்!

Date:

புத்தளம் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் காணப்படும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய பெரிய மரங்களை வெட்டி அகற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி. ஹேரத் , வலயக் கல்விப் பணிப்பாளர் ஊடாக அறிவித்துள்ளார்.

மழை மற்றும் கடும் காற்றுடனான வானிலையினால் புத்தளம் மாவட்டத்தில் மரங்கள் முறிந்து விழும் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், அதனை தடுக்கும் வகையில் இந்த அறிவுறுத்தல்களை அவர் வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக பிரதேச செயலாளர்களின் கவனத்திற்கு கொண்டுவருமாறும் அவர் கேட்டுள்ளார்.

இவ்வாறு பாரிய மரங்களை வெட்டி அகற்றுவதற்கு தேவையான நிதியை மாவட்ட செயலகம் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த புத்தளம் மாவட்ட செயலாளர், அதுதொடர்பில் குறித்த மரங்களை அகற்ற தேவையான மதிப்பீட்டு அறிக்கையை பிரதேச செயலாளரிடம் கையளிக்குமாறும் புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி. ஹேரத் மேலும் கேட்டுள்ளார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...