மறைந்த ஈரான் ஜனாதிபதிக்கு அனுதாப கையொப்பங்களை பெறும் செயல்திட்டம் புத்தளத்தில்

Date:

ஹெலிகாப்டர் விபத்தில் மரணமான ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்காக தமது ஆழ்ந்த அனுதாபங்களை புத்தளத்தில் வாழ்கின்ற மக்களும் தெரிவித்து வருகின்றனர்.

அதற்கமைய புத்தளம் கலாச்சார அமைப்பு ஏற்பாடு செய்திருக்கின்ற அனுதாப கையொப்பங்களை பெறுகின்ற செயல்திட்டம் தற்பொழுது புத்தளம் நுகுமான் மண்டபத்தில் இடம்பெறுகிறது.

இன்று காலை 8 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை பொதுமக்கள் இதில் கையொப்பங்களை இட முடியும்.

இன்று மாலை வரை பெறப்படுகின்ற இந்த கையொப்பங்களை இலங்கையில் உள்ள ஈரான் தூதுவராலயத்தின் ஊடாக ஈரான் நாட்டின் பதில் ஜனாதிபதியின் அலுவலகத்திற்கு பாரப்படுத்தப்பட உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

ஈரான் இஸ்லாமிய குடியரசு இலங்கையில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்கும் அது போன்று நலிவுற்ற மக்களுக்கான நல நலன் திட்டங்களுக்கும் தொடர்ந்து உதவி வரும் ஒரு நாடு என்பதினால் இந்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக புத்தளம் கலாச்சார அமைப்பு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...