முஸ்லிம் திணைக்களத்தின் தற்காலிக பணிப்பாளராக கிறிஸ்தவ மத விவகாரத் திணைக்களப் பணிப்பாளர்!

Date:

முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தின் பணிப்பாளராகக் கடமையாற்றிய பைஸல் ஆப்தீன் உயர்பதவி பெற்றுச் சென்றதன் பி்ன்னரான வெற்றிடம் கிறிஸ்தவ மத விவகாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் சத்துரி பின்டோ அவர்களினால் நிரப்பப்பட்டுள்ளது.

இம்மாதம் 14 ஆம் திகதி முன்னாள் பணிப்பாளர் பைஸல் ஆப்தீன் விலகிச் சென்றதிலிருந்து இவர் பணிப்பாளராக பதில் கடமையாற்றி வருகின்றார்.

தற்போது மும்முரமாகச் செயற்படும் ஹஜ் விவகாரங்கள், வக்பு சபை உள்ளிட்ட அனைத்து விவகாரங்களும் முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தின் தற்காலிகப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ மத விவகாரப் பணிப்பாளரினாலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களம் தனியாக இயங்கி வந்த ஒன்பது மாடிக் கட்டடத்திலேயே தற்போது கிறிஸ்தவ மற்றும் இந்து மத விவகாரத் திணைக்களங்களும் இயங்கி வருகின்றன.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...