‘முஸ்லிம் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் விவகாரத்தை அரசியலாக்குவது நல்லதல்ல’

Date:

குறிப்பு: நேற்று எமது செய்தி தளத்தில் முஸ்லிம் திணைக்களத்தின் பதில் பணிப்பாளராக நியமனம் பற்றிய செய்தியை பிரசுரித்தோம். இவ்விடயம் முஸ்லிம் சமூகம் மட்டத்தில் பேசுபொருளாக மாறியுள்ளதை அவதானிக்க முடிகிறது.

குறிப்பாக முஸ்லிம் அரசியல் மட்டத்தில் பல விமர்சனங்களை அவதானிக்க முடியுமாக இருக்கிறது. இது தொடர்பாக முகப் புத்தகத்தில் பதிவிடப்பட்ட ஒரு கருத்தை வாசகர்களுக்கு முன்வைக்கிறோம்.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் வரும் வரை திணைக்களத்தின் 9 மாடி கட்டிடத்தில் 3ஆவது மாடியில் கிறிஸ்தவ திணைக்களம் உள்ளது.

கிறிஸ்துவ திணைக்களத்தின் பணிப்பாளராக  சத்துரி பின்டோ அவர்களே பதில் பணிப்பாளராக நியமிகக்கப்பட்டுள்ளார். மிகத் திறமையானவர்,  துணிச்சல்மிக்கவர் மிகத் தியாகத்துடன் பணியாற்றுகின்றார்.

தயவு செய்து இதனை அரசியலாக்க வேண்டாம் , தற்காலிக பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பணிப்பாளர் மிகத் திறமையானவர் அவர் இருக்கும் இந்த குறுகிய காலத்தில் திணைக்களத்தின் சில குறைபாடுகளை நிவர்த்தி செய்யலாம் இதனை அரசியலாக இனவாதமாக எமது முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் பார்க்க கூடாது.

இதனை வைத்து அரசியல் செய்யவும் கூடாது மிக துணிச்சலான மிக நேர்மையான ஒருவர் பதில் பணிப்பாளர் மட்டுமே உண்மையில் எமது முஸ்லிம் அரசியல் மற்றும் ஏனைய ஒருசிலர் இதனை அணுகும் முறை கவலைக்குறியதாகும் எனவும் குறிப்பிட்ட முகப்புத்தகத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...