ரபா தாக்குதலை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு உத்தரவு: சர்வதேச நீதிமன்றம்

Date:

காசாவின் ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தவேண்டும் என சர்வதேச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

இஸ்ரேல் உடனடியாக ரபா மீதான தாக்குதலையும் ஏனைய நடவடிக்கைகளையும் நிறுத்தவேண்டும் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனிதாபிமான பொருட்களை காசாவிற்குள் கொண்டு செல்வதற்காக இஸ்ரேல் எகிப்து எல்லையில் உள்ள ரபா எல்லையை திறக்க வேண்டும் விசாரணையாளர்களும் காசாவில் என்ன நடக்கின்றது என்பதை அறிவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களும் காசாவிற்குள் செல்வதற்கு அனுமதிக்கவேண்டும் எனவும் சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சர்வதேச நீதிமன்றம் தனது உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஒரு மாத காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் காசாவிற்கான அடிப்படை சேவைகள் மற்றும் மனிதாபிமான உதவிகளை “தடையின்றி வழங்குவதற்கு” இஸ்ரேலுக்கு ஒரு தேவையை இந்த தீர்ப்பு மீண்டும் வலியுறுத்தியது.

காசாவில் இஸ்ரேலிய பணயக் கைதிகள் இன்னும் ஹமாஸ் மற்றும் பிற ஆயுதக் குழுக்களால் தடுத்து வைக்கப்பட்டிருப்பது “ஆழ்ந்த கவலைக்குரியது” என்று நீதிபதி சலாம் கூறினார்.

அவர்களை உடனடியாக மற்றும் நிபந்தனையின்றி விடுவிக்க” அழைப்பு விடுத்தார். தீர்ப்பு வழங்கப்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு, இஸ்ரேல் போர் விமானங்கள் ரஃபாவின் மையத்தில் உள்ள ஷபூரா முகாம் மீது தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தின.

காசாவில் நடந்த போரில் இஸ்ரேலின் நடத்தை பற்றி கடும் விமர்சனம் அதிகரித்து வருகிறது, இந்த வாரம்,ஐரோப்பிய நாடுகள் பலஸ்தீனிய அரசை அங்கீகரிப்பதாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...