ரஷ்ய – உக்ரைன் போரில் இலங்கை படையினர் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

Date:

ரஷ்ய – உக்ரைன் போர் நடவடிக்கைகளுக்கு ஓய்வு பெற்ற இலங்கை படையினர் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்தார்.

இன்று பாராளுமன்றத்தில் ரஷ்ய – உக்ரேன் போரில் கூலிப்படையினராக ஓய்வு பெற்ற இலங்கை இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படும் சம்பவத்துடன் அரசாங்கத்திற்கும் தொடர்பு உள்ளதா என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபோட  கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இவ்விடயம் தொடர்பாக பதிலளித்து உரையாற்றியபோதே இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“ரஷ்ய – உக்ரைன் போர் நடவடிக்கைகளுக்கு ஓய்வு பெற்ற இலங்கை படையினர் ஈடுபடுத்தப்பட்ட ஆட்கடத்தல் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இலட்சக்கணக்கான பணம் பெற்று இந்த மோசடியுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவார்கள். இந்தப் பிரச்சினை இலங்கையில் மாத்திரம் அன்றி பல நாடுகளிலும் உள்ளது.

இருப்பினும், வெளிவிவகார அமைச்சு இந்த பிரச்சினைகளில் தலையிட்டு, அவர்களை நாட்டிற்கு அழைத்துவர அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்கும்.

அத்தோடு, இந்த ஆட்கடத்தல் சம்பவத்தின் முக்கியமானவர்கள் யார், இது எவ்வாறு இடம்பெறுகிறது என்பது தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள புலனாய்வுத்துறை மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்” என இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது!

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது...

‘வளர்ந்து வரும் சிறந்த கல்வி நிறுவனம்’ Amazon collegeக்கு மற்றுமொரு விருது.

உயர் கல்வித் துறையில் சுமார் 16 வருடங்களை நிறைவு செய்து வெற்றி...