ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்குத் தீ வைத்த சம்பவம் தொடர்பில் ஆசிரியர் கைது !

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் .

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் 36 வயதுடைய ஆசிரியர் என்பதுடன் அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர் .

இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்  இதுவரை 25 க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் இச் சம்பவத்துடன் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி இரவு அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரது வீட்டுக்கும் சொத்துக்களுக்கும் தீயிட்டுச் சேதப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...