ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்குத் தீ வைத்த சம்பவம் தொடர்பில் ஆசிரியர் கைது !

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் .

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் 36 வயதுடைய ஆசிரியர் என்பதுடன் அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர் .

இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்  இதுவரை 25 க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் இச் சம்பவத்துடன் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி இரவு அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரது வீட்டுக்கும் சொத்துக்களுக்கும் தீயிட்டுச் சேதப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...