‘ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன; சமாளிக்க தயாராக இருங்கள்’ ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்கு பகிரங்க எச்சரிக்கை

Date:

இராணுவத் தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டபோதிலும் சர்வதேச தீர்மானங்களை இஸ்ரேல் மதிக்கவில்லை என்று நஸ்ரல்லா  குற்றம் சாட்டினார்.

ஹமாஸ்- இஸ்ரேல் போர் 8வது மாதமாக நீடிக்கும் நிலையில், லெபனானைச் சேர்ந்த ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேலுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

எதிர்ப்பு மற்றும் விடுதலை தினத்தை முன்னிட்டு ஹிஸ்புல்லா அமைப்பின் பொதுச் செயலாளர் ஹசன் நஸ்ரல்லா, தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்போது, “எங்கள் தரப்பில் இருந்து உங்களுக்கு (இஸ்ரேல்) ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. சமாளிக்க தயாராக இருங்கள்” என எச்சரித்தார்.

மேற்கத்திய நாடுகளின் ஆதரவு இருந்தபோதிலும் இஸ்ரேலுக்கு ஏற்பட்ட பின்னடைவுகளை நஸ்ரல்லா பட்டியலிட்டார். பல ஐரோப்பிய நாடுகள் பலஸ்தீன அங்கீகரித்திருப்பது ஆக்கிரமிப்பாளர்களுக்கு பெரும் இழப்பு என்று அவர் கூறினார்.

இராணுவத் தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டபோதிலும் சர்வதேச தீர்மானங்களை இஸ்ரேல் மதிக்கவில்லை என்றும், ரபா மீது வன்முறைத் தாக்குதல்களை நடத்துவதாகவும் நஸ்ரல்லா குற்றம் சாட்டினார்.

ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா, பாலஸ்தீனிய பிரச்சினை மற்றும் காசா விவகாரத்தில் இஸ்ரேலுக்கு எதிராக போரிடுகிறது.

Popular

More like this
Related

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...