இம்ரான் கானுக்கு பிணை: இஸ்லாமாபாத் நீதிமன்றம் தீர்ப்பு

Date:

நில ஊழல் குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத் நீதிமன்றில் இன்று புதன்கிழமை (15) அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இம்ரான் கானின் வழக்கறிஞர் அவருக்குப் பிணை வழங்கப்படுவதை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உறுதிப்படுத்தினார்.

எவ்வாறாயினும் மேலும் இரு வழக்குகளுக்கான தண்டனையாக அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளாரென அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

அவர் நான்கு வழக்குகளில் குற்றவாளியென அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இரு வழக்குகளில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் முதல் பல்வேறு பல்வேறு வழக்குகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிய குற்றச்சாட்டு உட்பட பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

Popular

More like this
Related

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (04) நாட்டின் சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை...

தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதித்த மாலைதீவு

மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி...

இஸ்ரேலில் இருந்து 45 பலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல்...