இம்ரான் கானுக்கு பிணை: இஸ்லாமாபாத் நீதிமன்றம் தீர்ப்பு

Date:

நில ஊழல் குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத் நீதிமன்றில் இன்று புதன்கிழமை (15) அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இம்ரான் கானின் வழக்கறிஞர் அவருக்குப் பிணை வழங்கப்படுவதை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உறுதிப்படுத்தினார்.

எவ்வாறாயினும் மேலும் இரு வழக்குகளுக்கான தண்டனையாக அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளாரென அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

அவர் நான்கு வழக்குகளில் குற்றவாளியென அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இரு வழக்குகளில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் முதல் பல்வேறு பல்வேறு வழக்குகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிய குற்றச்சாட்டு உட்பட பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...