இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்களே அதிகளவில் கொல்லப்பட்டுள்ளனர்!

Date:

இலங்கையில் வடக்கு கிழக்கிலே அதிகளவான ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆதவன் செய்தி பிரிவுக்கு வழங்கிய விஷேட காணொளி பதிவிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இலங்கையில், வடக்கு கிழக்கு ஊடகவியலாளர்களுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

“வடக்கு – கிழக்கிலே அதிகளவான ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டார்கள். அதிகளவில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களும் தமிழ் ஊடகவியலாளர்களே.

சிவராம், நிமலராஜன் போன்றவர்களின் உயிர்களு பறிக்கப்பட்டது.

தற்போது, தமிழ் ஊடகவியலாளர்களே அடிப்பட்டு கொண்டிருக்கின்றார்கள்.

கருத்துச் சுதந்திரத்தை நிறுத்துவதற்கு அனைத்து அரசாங்கங்களும் ஊடகத்துறையையும், ஊடவியலாளர்களையுமே தாக்குகின்றனர்.

அதன்படி, ஊடக சுதந்திரதினமான இன்று, வெறுமனே ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தை பற்றி மட்டும் பேசுவதை தவிர்த்து, நடைமுறையில் உண்மையான சுதந்திரத்தை வழங்க வேண்டும்.

அவர்களுக்கு கிடைக்கும் இந்த சுதந்திரம் மக்களுடைய சுதந்திரமுமாகும்.” என அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...