இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்களே அதிகளவில் கொல்லப்பட்டுள்ளனர்!

Date:

இலங்கையில் வடக்கு கிழக்கிலே அதிகளவான ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆதவன் செய்தி பிரிவுக்கு வழங்கிய விஷேட காணொளி பதிவிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இலங்கையில், வடக்கு கிழக்கு ஊடகவியலாளர்களுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

“வடக்கு – கிழக்கிலே அதிகளவான ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டார்கள். அதிகளவில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களும் தமிழ் ஊடகவியலாளர்களே.

சிவராம், நிமலராஜன் போன்றவர்களின் உயிர்களு பறிக்கப்பட்டது.

தற்போது, தமிழ் ஊடகவியலாளர்களே அடிப்பட்டு கொண்டிருக்கின்றார்கள்.

கருத்துச் சுதந்திரத்தை நிறுத்துவதற்கு அனைத்து அரசாங்கங்களும் ஊடகத்துறையையும், ஊடவியலாளர்களையுமே தாக்குகின்றனர்.

அதன்படி, ஊடக சுதந்திரதினமான இன்று, வெறுமனே ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தை பற்றி மட்டும் பேசுவதை தவிர்த்து, நடைமுறையில் உண்மையான சுதந்திரத்தை வழங்க வேண்டும்.

அவர்களுக்கு கிடைக்கும் இந்த சுதந்திரம் மக்களுடைய சுதந்திரமுமாகும்.” என அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த...

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கமும்  மற்றும் இலங்கைக்கு...

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...