இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகளைத் திரும்பப் பெறுவது குறித்து பரிசீலிக்க வேண்டும்: ஹக்கீம்

Date:

காசா மீதான இராணுவத் தாக்குதல்களை நிறுத்தத் தவறினால், இஸ்ரேலுடனான தூதரக உறவுகளைத் திரும்பப் பெறுவது குறித்து இலங்கை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி ரவூப் ஹக்கீம் இன்று வலியுறுத்தியுள்ளார்.

இன்றைய தினம் பலஸ்தீன விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

“இஸ்ரேலை அச்சுறுத்தி, காசா மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் இலங்கை இராஜதந்திர உறவுகளை விலக்கிக்கொள்ளும் என்றும் கடைசி முயற்சியாக இதை செய்யுங்கள்” என்று ஹக்கீம் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்..

இதற்கு பதிலளித்த வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, இலங்கையின் வெளியுறவுக் கொள்கையானது அனைத்து நாடுகளுடனும் உறவுகளை ஏற்படுத்துவதும் பேணுவதும் ஆகும்.

“அனைத்து நாடுகளுடனும் உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதும், பேணுவதும்தான் எங்களின் வெளியுறவுக் கொள்கை. இருப்பினும், பலஸ்தீனத்தை நாங்கள் கைவிட்டுவிட்டோம் என்று அர்த்தமில்லை” என்று அவர் கூறினார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...