ஈரானில் 5 நாள் துக்கம் தினம் அனுஷ்டிப்பு!

Date:

ஈரானில் 5 நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டவுள்ளதாக அன் நாட்டின் ஆன்மீகத் தலைவர் அலி காமெனியின் தெரிவித்துள்ளார்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் அமீர் அப்துல்லாஹி உள்ளிட்ட குழுவினரின் மரணம் தொடர்பான விசேட அறிவிப்பை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளதுடன் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியுடன் பயணம் செய்த வெளியுறவு அமைச்சர் மற்றும் ஏனைய அதிகாரிகளின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

விபத்து இடம்பெற்ற அஜர்பைஜானை ஒட்டியுள்ள ஜல்பா நகரின் மலைப்பகுதியில் இருந்து குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன

மேலும் ஈரானின் ஜனாதிபதியாக அந்நாட்டு துணை ஜனாதிபதி முஹம்மது முக்பர் (Mohammad Mokhber) பதவியேற்க உள்ளதாக ஈரானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...