கம்பஹா மாவட்டத்திலுள்ள மூத்த ஆலிம்களை கௌரவிக்கும் வகையில் இன்று (23) வத்தளை ஹுனுப்பிட்டிய Heaven’s Gate Banquet Hall இல் நிகழ்வொன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் துணைத் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஜே.அப்துல் காலிக் அவர்களும் சிறப்பு பேச்சாளராக ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் முதல்வர் ஏ.சி. அகார் முஹம்மத் அவர்களும் கலந்துகொண்டனர்.
மேலும் விசேட விருந்தினர்களாக அஷ்ஷெய்க் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பதில் தலைவர் ஏ.எல்.எம். ரிழா, நீதவான் எம்.டி. முகமது லஃபர் (Judge of the Court of Appeal of the Democratic Socialist Republic of Sri Lanka) ஆகியோரும் கலந்துகொண்டனர்.