கம்பஹாவில் காணாமல் போன பாடசாலை மாணவிகள் கண்டுபிடிப்பு

Date:

கம்பஹா, யக்கல பகுதியில் மேலதிக வகுப்புகளுக்காக சென்ற 14 வயதுடைய பாடசாலை மாணவிகள் மூவர் நேற்று மாலை முதல் காணாமல் போயிருந்த நிலையில் இன்று காலியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் யக்கல பொலிஸாருக்கு ஒரு முறைப்பாடும் மற்றைய இரண்டு முறைப்பாடுகள் வீரகுல பொலிஸாருக்கும் கிடைத்திருந்தன.

இந்நிலையில் இது தொடர்பான விசாரணை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஆரம்பிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த மாணவிகள் பொலன்னறுவையில் இருந்து காலி செல்லும் போது பெண்ணொருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.

இதேவேளை மூன்று மாணவிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெண் பிள்ளைகளுக்கு இந்த சமுதாயத்தில் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. அந்த வகையில், பல மாணவிகள் தங்களின் பரீட்சை முடிந்த கையோடு பெற்றோருக்கு எந்த தகவலும் வழங்காமல் வீட்டை விட்டு ஓடும் சம்பவங்கள் பல அண்மையில் இருந்து பதிவாகியுள்ளன.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...