கற்பிட்டி நரக்களி பாடசாலையின் ஆரம்ப பிரிவில் இடம்பெற்ற புத்தாண்டு நிகழ்வு

Date:

கற்பிட்டி நரக்களி றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்தின் தரம் 01 தொடக்கம் 05 வரையான ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு  (02) பாடசாலையின் அதிபர் அமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

பால் பொங்கும் நிகழ்வுடன் ஆரம்பிக்கப்பட்ட புத்தாண்டு நிகழ்வு முட்டி உடைத்தல், கயிறு இழுத்தல் அவுருது குமரயா, அவுருது குமாரி , யானைக்கு கண் வைத்தல் பேன்ற பாரம்பரிய போட்டிகள் இடம்பெற்றது.

மேலும் இன்றைய நிகழ்வுகளுக்கு மாணவ மாணவிகள் தங்கள் விரும்பிய தமிழ், சிங்கள பாரம்பரிய உடைகளில் பாடசாலைக்கு சமூகமளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.

இப் புத்தாண்டு விளையாட்டு போட்டி நிகழ்வுகளை ஆரம்ப பிரிவு பகுதி தலைவர் திருமதி அஜந்தா வகுப்பாசிரியர்களான பேகம், சகன்யா, பஸ்னா மற்றும் நயோமி ஆகிய வகுப்பாசிரியர்களின் வழிப்படுத்தலின் கீழ் சிறப்பாக இடம்பெற்றதாக பாடசாலையின் பிரதி அதிபர் மரிய லாவுஸ் மேர்சி தெரிவித்தார்.

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

Popular

More like this
Related

‘உலக மக்கள் காசா பக்கம் நிற்கும் வரை இஸ்ரேல்-அமெரிக்காவின் சதி நிறைவேறாது”: இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற பேரணி!

சென்னையில் காசாவில் நிலவும் போரினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, பெரியாரிய உணர்வாளர்கள்...

2025(2026)சாதாரண பரீட்சைக்கான ONLINE விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2025(2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைககு தோற்றுவதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள்...

இலங்கையில் அதிகரித்துள்ள இணையவழி துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும்...

சவூதி- பாகிஸ்தான் ஒப்பந்தம்: இந்தியா உடனான உறவுகளை மனதில் வைத்து சவூதி செயல்படும் என நம்புவதாக இந்தியா தெரிவிப்பு.

சவூதி மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கையெழுத்தான...