சஜித்தின் மே தின மேடையை புறக்கணித்த ராஜித, தலதா

Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களாக கருதப்படும் ராஜித சேனாரட்ன, தலதா அத்துகோரள ஆகியோர் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

ஐக்கள் மக்கள் சக்தி பிரதான பங்காளிக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனும் கலந்துகொள்ளவில்லை.

கட்சிக்குள் உள்ள ஏற்பட்டுள்ள சில கருத்து முரண்பாடுகள் காரணமாகவே ராஜித சேனாரட்ன, தலதா அத்துகோரள ஆகியோர் மே தின நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை எனத் தெரியவருகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைத்துக்கொள்வதற்கு எதிராக தலதா அத்துகோரள அண்மையில் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார். அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் இணைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த பின்புலத்திலேயே இன்றைய கூட்டத்தில் அவர் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...