சஜித்தின் மே தின மேடையை புறக்கணித்த ராஜித, தலதா

Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களாக கருதப்படும் ராஜித சேனாரட்ன, தலதா அத்துகோரள ஆகியோர் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

ஐக்கள் மக்கள் சக்தி பிரதான பங்காளிக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனும் கலந்துகொள்ளவில்லை.

கட்சிக்குள் உள்ள ஏற்பட்டுள்ள சில கருத்து முரண்பாடுகள் காரணமாகவே ராஜித சேனாரட்ன, தலதா அத்துகோரள ஆகியோர் மே தின நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை எனத் தெரியவருகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைத்துக்கொள்வதற்கு எதிராக தலதா அத்துகோரள அண்மையில் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார். அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் இணைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த பின்புலத்திலேயே இன்றைய கூட்டத்தில் அவர் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...