சம்பிக்கவின் சாரதிக்குப் பதிலாக மனைவி குழந்தைகளை தடுத்து வைத்தமை மனித உரிமை மீறல்: நீதி மன்றம் தீர்ப்பு!

Date:

இலங்கை பொலிஸார் அடிப்படை உரிமையை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

ராஜகிரிய பகுதியில் 2016ம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில், முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதியை கண்டுபிடிக்கும் நோக்கில், அவரது மனைவி, குழந்தை மற்றும் அவரது தாய் ஆகியோரை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவில் முறையற்ற விதத்தில் பல மணிநேரம் தடுத்து வைத்துள்ளதாக உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

அதன்படி, அடிப்படை உரிமையை மீறியதற்காக பொறுப்பை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் அப்போதைய பதில் பணிப்பாளர் நெவில் சில்வா மற்றும் பிரதம பொலிஸ் பரிசோதகர் மெத்தானந்த ஆகியோர் தமது சொந்த நிதியிலிருந்து 2,50,000 ரூபாவை பாதிக்கப்பட்ட தரப்பிற்கு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசாங்கத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பிற்கு 10,000 ரூபாவை வழங்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...