சாதாரணதர பரீட்சை நாளை ஆரம்பம்: முஸ்லிம் மாணவிகளுக்கான அறிவித்தல்

Date:

நாளையதினம் ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாணதரப் பரீட்சையில் பங்கேற்கும் அனைத்து முஸ்லிம் மாணவிகளுக்கும் பரீட்சை நிலையத்தில் ஹிஜாப் அணிவது தொடர்பில் அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

சில பிரதேசங்களில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளில் ஹிஜாப் அணிந்து பரீட்சை நிலையங்களுக்குள் பிரவேசிக்க முடியாது என்ற பொய்யான தகவல்கள்   பகிரப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் பரீட்சை திணைக்களத்தின் பாடசாலை பரீட்சைகள் ஆணையாளர் நீல் அத்துகோரளவிடம் ‘நியூஸ் நவ்’ விசாரித்த போது,

2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பரீட்சை திணைக்களத்தின் வர்த்தமானி அறிவித்தலின் படி தேசிய அடையாள அட்டையில் காணப்படுவது போல  அனைத்து பரீட்சார்த்திகளும் தமது முகம் மற்றும் காதுகள் தெளிவாக தெரிவதை உறுதி செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார்.

பரீட்சார்த்தியின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் புளூடூத் போன்ற சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையிலும் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்காரணமாக ஹிஜாப் அணிவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் அதனை காதுகளை திறந்து விடுவது கட்டாயம் எனவும் ஆணையாளர் நீல் அத்துகோரல தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...