சாதாரணதர பரீட்சை நாளை ஆரம்பம்: முஸ்லிம் மாணவிகளுக்கான அறிவித்தல்

Date:

நாளையதினம் ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாணதரப் பரீட்சையில் பங்கேற்கும் அனைத்து முஸ்லிம் மாணவிகளுக்கும் பரீட்சை நிலையத்தில் ஹிஜாப் அணிவது தொடர்பில் அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

சில பிரதேசங்களில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளில் ஹிஜாப் அணிந்து பரீட்சை நிலையங்களுக்குள் பிரவேசிக்க முடியாது என்ற பொய்யான தகவல்கள்   பகிரப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் பரீட்சை திணைக்களத்தின் பாடசாலை பரீட்சைகள் ஆணையாளர் நீல் அத்துகோரளவிடம் ‘நியூஸ் நவ்’ விசாரித்த போது,

2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பரீட்சை திணைக்களத்தின் வர்த்தமானி அறிவித்தலின் படி தேசிய அடையாள அட்டையில் காணப்படுவது போல  அனைத்து பரீட்சார்த்திகளும் தமது முகம் மற்றும் காதுகள் தெளிவாக தெரிவதை உறுதி செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார்.

பரீட்சார்த்தியின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் புளூடூத் போன்ற சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையிலும் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்காரணமாக ஹிஜாப் அணிவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் அதனை காதுகளை திறந்து விடுவது கட்டாயம் எனவும் ஆணையாளர் நீல் அத்துகோரல தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...