சீரற்ற வானிலை : பாடசாலைகள் குறித்த அறிவிப்பு!

Date:

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக புத்தளம் மாவட்டமே இதுவரை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அந்த மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் 20, 21 ஆம் திகதிகள் மூடப்பட்டிருந்த போதிலும் நாளை 22 ஆம் திகதி வழமை போன்று மீண்டும் திறக்கப்படும் என பிராந்தியக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பேரிடர் பகுதிகளில் பாடசாலைகள் திறக்கப்படுமா? இல்லை? என்பதை பிராந்தியக் கல்விப் பணிப்பாளர்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாடளாவிய ரீதியாக உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை மூடப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அறிவிப்பு பொய்யானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளைய தினம் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...