தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக புத்தளம் மாவட்டமே இதுவரை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அந்த மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் 20, 21 ஆம் திகதிகள் மூடப்பட்டிருந்த போதிலும் நாளை 22 ஆம் திகதி வழமை போன்று மீண்டும் திறக்கப்படும் என பிராந்தியக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
பேரிடர் பகுதிகளில் பாடசாலைகள் திறக்கப்படுமா? இல்லை? என்பதை பிராந்தியக் கல்விப் பணிப்பாளர்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நாடளாவிய ரீதியாக உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை மூடப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அறிவிப்பு பொய்யானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எனவே, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளைய தினம் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.