சுரக்‌ஷா காப்புறுதி திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை!

Date:

சுரக்‌ஷா காப்புறுதி திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதியின் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஆலோசகர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டில் ஆரம்பமான காப்புறுதிட்டம் 2022 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது.

நாட்டின் குழந்தைகளைப் பற்றி சிந்தித்து சுகாதாரக் காப்புறுதியை ஆரம்பிக்க வேண்டியது அவசியம் என தெரிவித்த அவர் பாடசாலை செல்லும் மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு சுரக்‌ஷா காப்புறுதி திட்டம் உதவும் எனவும் தெரிவித்தார்.

“அமைச்சரவையின் தீர்மானத்தின் பிரகாரம் காப்புறுதியில் நிபுணத்துவம் பெற்ற இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் போன்ற நிறுவனம் காப்புறுதி திட்டத்திற்கு பங்களிக்க உள்ளது.

இந்த காப்புறுதியின் கீழ் அரச அல்லது தனியார் வைத்தியசாலையில் உள்நோயாளியாக சிகிச்சை பெறுவதற்கு மூன்று இலட்சம் ரூபா வரையிலும், வெளிநோயாளர் சிகிச்சைக்கு இருபதாயிரம் ரூபா வரையிலும், தீவிர சிகிச்சைக்கு 15 இலட்சம் ரூபா வரையிலும் நன்மைகள் கிடைக்கப்பெறும்.

அனைத்து அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள், மற்றும் விசேட பாடசாலை மாணவர்கள் இந்த காப்புறுதியை பெற உரித்துடையவர்கள்” என ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...