ஜனாதிபதி இந்தோனேசியா பயணம்!

Date:

இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் 10 ஆவது உலக நீர் மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (18) காலை இந்தோனேசியா பயணமானார்.

இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்கிறார்.

‘கூட்டு செழுமைக்கான நீர்’ என்ற தொனிப்பொருளில் 10 ஆவது உலக நீர் மாநாடு மே 18 முதல் 20 வரை இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் மே மாதம் 20 ஆம் திகதி மாநாட்டில் விசேட உரையாற்றவுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இந்தோனேசிய ஜனாதிபதி உள்ளிட்ட அந்நாட்டின் பல உயர்மட்ட பிரதிநிதிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளார்.

Popular

More like this
Related

எல் நினோ தாக்கம் தீவிரம்: 74 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 34% ஆக வீழ்ச்சி

நாட்டில் அநேகமான பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக சுமார் 74...

தொழுகைக்கு முன் வுளு செய்வதற்கு குறைந்தளவு தண்ணீர்: பிரிட்டன் அரசு அமைப்பின் வழிகாட்டுதலால் சர்ச்சை!

பிரிட்டனின் நீர் விநியோகத் துறை முறைப்படுத்தும் அரசு சார்பற்ற அமைப்பான Ofwat...

இலங்கையில் தீவிரமடையும் டெங்கு: 94,000-க்கும் அதிகமானோர் பாதிப்பு, 71 பேர் பலி!

இலங்கையில் இந்த ஆண்டு மொத்தம் 94,037 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 71...

எல் நினோ தாக்கம் காரணமாக நாட்டின் 7 மாவட்டங்கள் பாதிப்பு

எல் நினோ தாக்கம் காரணமாக நாட்டின் 7 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக...