ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் கிளையால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப்பொதிகள் வழங்கி வைப்ப்பு

Date:

சீரற்ற காலநிலையால் புத்தளம் மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தள நகர கிளையின் ஊடாக மூன்றாவது நாளாக  1250 குடும்பங்களுக்கு தேவையான பகல் போசணம் மற்றும் இரவு போசணம் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.
அதற்கமைய அக்ஸா மஸ்ஜித் (இல்லியாஸ் வத்தை) அல் அமீன் மஸ்ஜித் (இருவது வீடு) குபா மஸ்ஜித் (குபா பகுதி) வாஹித் மஸ்ஜித் தாரிக் மஸ்ஜித் பலாஹ் மஸ்ஜித் (கடையாகுளம்) அஷ்ரப்பிய்யா மஸ்ஜித் (கடையாகுளம்) ஹஸனாத் மஸ்ஜித் நபீஸா மஸ்ஜித் (குவைத் வைத்தியசாலை பகுதி ) மணத்தீவு பகுதி வாழ் பாதிக்கப்பட்ட மக்களுக்கே இவ்வாறு உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
அனைத்து உலமாக்களும் ஒவ்வொரு வீடாக சென்று உணவு பொதிகளை கொடுத்துடன்  கண்ணியமான மஸ்ஜித் நிர்வாகத்தில் உள்ளவர்கள், சமூக சேவையாளர்கள் மூலமாக அந்த அந்த இடங்களுக்கு உணவு பொதிகள் விநியோகம் செய்வதற்கு மிகவும் உதவி செய்தவர்கள்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...